இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி அறிவிப்பு

இன்று இன்று இரவு 12 மணிி முதல் அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும்

3 வாரம் சமூக விலகல் அவசியம்

அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும்
உறவினர் உட்பட வெளியாட்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்  -பிரதமர் மோடி
இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வரப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலமும் , ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் ஊடரங்கில் வரும்.

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கொரோனாவை வீழ்த்த சமூக விலகல் மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காட்டுத்தீ போல கொரோன வைரஸ் பரவி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார்.

Join Telegram& Whats App Group Link -Click Here