Jacto Geo strike case withdraw Go No 9 Date 2.2.2021
பொதுப்பணிகள் - 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவற்றின் மீதான மேல்நடவடிக்கைகளை கைவிடுதல் -ஆணை வெளியிடப்படுகிறது அரசாணை (நிலை) எண்.9 நாள்: 2.2.2021
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிறகிணங்க, பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன:-
(i) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன;
(ii) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, அரசுப் பணியாளர்கள் மறறும் ஆசிரியர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில், தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் எவையேனும் இருப்பின், அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன; மறறும்
(iii) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..