Jacto Geo strike case withdraw Go No 9 Date 2.2.2021


பொதுப்பணிகள் - 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவற்றின் மீதான மேல்நடவடிக்கைகளை கைவிடுதல் -ஆணை வெளியிடப்படுகிறது அரசாணை (நிலை) எண்.9 நாள்: 2.2.2021

 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிறகிணங்க, பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன:-

(i) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன;

(ii) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, அரசுப் பணியாளர்கள் மறறும் ஆசிரியர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில், தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் எவையேனும் இருப்பின், அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன; மறறும்

(iii) 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன.


Jacto geo strike case withdraws - Go No 9 Date 2.2.2021 PDF 



Join Telegram& Whats App Group