12Th  Original Mark Certificate Issuance Day

12ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் 17.09.2021 முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்கப்படும்!!!


2019-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண்  சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது .


மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வரும் போது கடைபிடிக்க வேண்டிய  வழிகாட்டுதல் நெறிமுறைகள் 

1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

2. பள்ளியில் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.