Tamil Paper Compulsory All compertitive Exam ( TNPSC, TRB,MRB,TNSURB,TNFUSRC)
தமிழக இளைஞர்களை 100 சதவிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்” தமிழக அரசு அரசாணை வெளியீடு .. GO No 133 Date 01.12.2021
All compertitive Exam Tamil Paper Compulsory Go.No.133 Date 01.12.2021
மேற்படி ஆணையிணைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் TNPSC பொருத்த வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்.
●தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
●தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
●மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.
●தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தொகுதி-I, II மற்றும் II A ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட நடைமுறைகள்
● தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றTNPSC முதல் நிலை (Preliminary Exam ) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Exam) என இரண்டு நிலைகளை கொண்டதாக உள்ள தொகுதி I,II,மற்றும்IIA ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் தமிழ்மொழி தகுதி தேர்வானது முதன்மைத் தேர்வுடன்(Main Exam) விரித்துரைக்கும் வகையிலான (DescriptiveType) தேர்வாக அமைக்கப்படும்.
●மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.
●இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும்.
●இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவித மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஒரே நிலை கொண்ட தேர்வுகளின் (தொகுதி IIIமற்றும் IV) நடைமுறைகள் விவரம்.
●தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
●அதாவது, தொகுதி III,IV போன்ற, ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும்.
●இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி- அ என கொள்குறி வகையில் நடத்தப்படும்
●பொது அறிவு , திறனறிவு , மனக்கணக்கு நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி - ஆ என கொள்குறி வகையில் நடத்தப்படும்.
●இவ்விரண்டு பகுதிகளின் பகுதி அ மற்றும் ஆ அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..