திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

விளக்கம்:

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

பழமொழி

Happiness depends upon ourselves.

மகிழ்ச்சி நம்மைச் சார்ந்தே இருக்கிறது.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

குறிக்கோள் இல்லாத முயற்சி என்பது ஓட்டைச் சட்டியில் போடும் உருப்படி போன்றது...

பொது அறிவு

1.பூச்சி இனங்களில் மிகவும் அறிவாற்றல் உடையது எது?

எறும்பு.

2.உலகிலேயே அதிகமாக சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்?

லெனின்.

English words & meanings

Xylology – study of wood. மரப் பலகைகள் குறித்த படிப்பு.

 Xylophagous - worms which lives by eating wood. மரம் தின்று வாழ்கின்ற

ஆரோக்ய வாழ்வு

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் நம்மை அண்டாது.

Some important  abbreviations for students

NC - No comment

NM - Not much

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பொன் முட்டையிடும் வாத்து

குறள் :
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம் :
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

கதை :
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது. தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்? இது இப்படியே நீடித்தால் வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும் அதை விற்று அன்றாடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனத் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒரு முட்டை இருந்தது. அதன் வயிற்றில் மற்ற வாத்துகள்போல் வெறும் குடலே இருந்ததை கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

நீதி :
அதிக ஆசை ஆபத்தானது

இன்றைய செய்திகள்

21.02.20

★தேர்வுகளில் மாணவ, மாணவியர் காப்பி அடிப்பதைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் உள்ள ஆண் ஆசிரியர்கள் மாணவிகளைப் பரிசோதிக்க தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

★திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  தெரிவித்தார்.

★குஜராத் வருகை தரும் அமெரிக்க அதிபரை ஒரு லட்சம் பேர் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

★அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

★ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 மகளிர் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

★ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

Today's Headlines

🌸The Selection Department has banned male teachers in the flying squad to track the malpractice in the examination by the girl student

 🌸In the Farmer's grievance meeting held at Tirunelveli the District Revenue Officer told that a mobile paddy purchasing centre will be opened soon, the arrangements are under progress for the same.

 🌸Officials said the US President will be welcomed by one lakh people while he visit India

🌸 Sri Srinivasan who is an Indian Origin is appointed as a Chief Justice in the US Court of Appeal.

 🌸The Indian team had beaten Australia in the first match of the T20 Women's World Cup cricket in Australia.

 🌸India bags 3 gold and 1 silver medal in the Asian Wrestling Championships.

Prepared by
Covai women ICT_போதிமரம்