தற்போது உலகமெங்கும் நடைபெற்று வருவது 'உயிரியல் அழிவு சகாப்தம்' என நியூயார்க்  விஞ்ஞானிகள்  எச்சரிக்கை  விடுத்துள்ளனர். அதாவது உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் அழிந்து வருகின்றன. இது மாபெரும் அளவில் நிறுத்த முடியாதபடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 'தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, "விலங்குகளின் தற்போதைய அழிவானது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஆறில் ஒரு பகுதி ஆழிவானது மனிதன் விலங்குகளின் வாழ்விடத்தை அழிப்பதால் ஏற்படுகிறது. மற்ற ஐந்து பங்கு அழிவுகள் இயற்கை நிகழ்வுகளாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் ஏற்படுகிறது."

மேலும், கடந்த 100 ஆண்டுகளில் 200 உயிரினங்கள் அழிந்துவிட்டன. தவிர கடந்த 20 லட்சம் ஆண்டுகளில், ஒவ்வொரு 100 ஆண்டிலும் எதாவது ஓர் இனம் அழிந்து வரும் நிலை நிலவுகிறது என்றும் அதைக் காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.