புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச பியூச்சர் போனை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் இந்த போனை பெற ரூ.1500 முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும், இந்த தொகை 3 ஆண்டுகள் கழித்து போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரப்படும் என தெரிவித்திருந்தது.
இதன்படி இந்தியாவில் முன்பதிவு செய்த 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜியோ போனை பெறும் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளை ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் முதன் முறையாக வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜியோ போன் அறிமுக விழாவின் போது முகேஷ் அம்பானி அறிவிக்காதவை.
புதிய விதிகள் :
* ஜியோபோன் பயன்படுத்துவோர் தொடர்ந்து அதனை 3 ஆண்டுகள் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 வரை ரீசார்ஜ் செய்தாக வேண்டும். அதாவது 3 ஆண்டுகளுக்கு ரூ.4,500 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.* ஜியோபோனை பெறுவதற்கு ரூ.1,500 முன்பணம் செலுத்துவது போல், அந்த போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1500 வரை செலுத்த வேண்டும்.
* ஒருவேளை ஜியோ போன் வைத்திருப்போர் முதல் ஆண்டு முடிவிலேயே அதன் மீது திருப்தி ஏற்படாமல் திரும்ப தர விரும்பினால், அவர்களிடம் இருந்து ரூ.1,500 உடன் ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளும் சேர்த்தே வசூலிக்கப்படும்.
* ஓராண்டிற்கு பிறகு, அதே சமயம் இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னதாக போனை திரும்ப அளிக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1,000 செலுத்துவதுடன், அதற்கான ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளையும் செலுத்த வேண்டும். இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதே சமயம் 3 ஆண்டுகள் முடிவதற்குள் போனை திரும்பத் தருவோர் கூடுதலாக ரூ.500 உடன் வரிகளையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
இதன்படி இந்தியாவில் முன்பதிவு செய்த 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜியோ போனை பெறும் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளை ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் முதன் முறையாக வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜியோ போன் அறிமுக விழாவின் போது முகேஷ் அம்பானி அறிவிக்காதவை.
புதிய விதிகள் :
* ஜியோபோன் பயன்படுத்துவோர் தொடர்ந்து அதனை 3 ஆண்டுகள் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 வரை ரீசார்ஜ் செய்தாக வேண்டும். அதாவது 3 ஆண்டுகளுக்கு ரூ.4,500 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.* ஜியோபோனை பெறுவதற்கு ரூ.1,500 முன்பணம் செலுத்துவது போல், அந்த போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1500 வரை செலுத்த வேண்டும்.
* ஒருவேளை ஜியோ போன் வைத்திருப்போர் முதல் ஆண்டு முடிவிலேயே அதன் மீது திருப்தி ஏற்படாமல் திரும்ப தர விரும்பினால், அவர்களிடம் இருந்து ரூ.1,500 உடன் ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளும் சேர்த்தே வசூலிக்கப்படும்.
* ஓராண்டிற்கு பிறகு, அதே சமயம் இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னதாக போனை திரும்ப அளிக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1,000 செலுத்துவதுடன், அதற்கான ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளையும் செலுத்த வேண்டும். இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதே சமயம் 3 ஆண்டுகள் முடிவதற்குள் போனை திரும்பத் தருவோர் கூடுதலாக ரூ.500 உடன் வரிகளையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..