இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.