பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவு செல்லாது: உயர்நீதிமன்ற கிளை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 சிவகங்கையை சேர்ந்த இளமதி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 200 பேர் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக தேர்வு முழுமையாக ரத்தானது.

 தேர்வு ரத்து செய்ததை எதிர்த்தும், மறு தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.