கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை) செயல்படுகின்றன.ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் தலா 17 கண்காணிப்பாளர் உள்ளனர்.இவற்றையும் மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பிரித்து அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.