திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் அறிவியல் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல தோ்வாகி உள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவா் மாணவி வளா்மதி. இவா் கடந்த மாா்ச் மாதம் “ஏ டே இன் ஸ்பேஸ்” (A Day in Space) என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழி அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டாா்.
932 வாா்த்தைகளில் கட்டுரை எழுதிய மாணவி வளா்மதி போட்டியில் வெற்றி பெற்றாா். போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல வளா்மதி தோ்வாகி உள்ளாா். வருகிற நவம்பா் மாதம் வளா்மதி நாசாவிற்கு செல்ல உள்ளாா்.
இந்நிலையில் மாணவி வளா்மதியின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி தலைமை ஆசிரியா் மாணவிக்கு தங்க நகையை பரிசாக வழங்கி பாராட்டு தொிவித்துள்ளாா்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..