நடந்து முடிந்த பிளஸ்1, பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கான உடனடித் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது
அதற்காக விண்ணப்பிக்க ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன
அந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், ஜூன் மாதம் நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வு எழுத கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது
அப்படி அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டம் என்னும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்
அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள தேர்வுத்துறையின் சேவை மையங்களில் 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வுத்துறை சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..