
பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ஆம் தேதி வெளி
யானது. இதில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகக் கருதினால் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும் வழிகாட்டுதலை, அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக ரூ. 275 செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ. 205 செலுத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..