தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.
பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை:
தமிழ் 319
ஆங்கிலம் 223
கணிதம் 279
இயற்பியல் 210
வேதியியல் 56
தாவரவியல் 154
விலங்கியல் 144
வரலாறு 104
புவியியல் 11
பொருளாதாரம் 211
வணிகவியல் 99
அரசியல் அறிவியல் 14
உடற்கல்வியியல் 16
உயிர்வேதியியல் 1
நுண்ணுயிரியியல் 1
மனையியல் 1
இந்திய பண்பாடு 1
என மொத்தம் -2144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..