
புதுதில்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று புதன்கிழமை (ஜூன் 5) காலை வெளியாகும் என காத்திருந்த நிலையில், மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரத்திற்கு முன்பாகவே, www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் நுழைவு தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. தேசிய தேர்வு முகமை.
தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்களில் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடை 9.01% சதவீதம் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தில்லியில் 74.92% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..