தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம்.
தமிழக முதல்வர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சி கடந்த 1998 முதல் கோரிக்கை வைத்து வந்தனர்.
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியை மேம்படுத்த தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வாக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி, மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை, சமக எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் உள்ளிட்டோரும் தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தென்காசி மாவட்டம் குறித்து உறுதி கொடுத்துள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..