ஹெல்மெட் அணியாதோரிடம், அபராதமாக, 100 ரூபாய் வசூலித்தனர்.இனி, 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை, விரைவில் அமலுக்குவர உள்ளது.இது குறித்து, சென்னை போக்குவரத்து போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகளில், 90 சதவீத இளைஞர்கள், தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணியும் சிலரும், தாடை பகுதியில், இணைப்பு பெல்ட் அணிவதில்லை.வதந்தி:குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போதும், மார்க்கெட்டிற்கு செல்லும் போதும், ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக, வாகன ஓட்டிகளிடம் வதந்தி பரவுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள், எங்கு, எவ்வளவு துாரம் சென்றாலும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
அதேபோல, பின்னால் அமர்வோரும் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு, ஹெல்மெட் அணிவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். விபத்து எங்கே, எப்போது நடக்கும் என, யாருக்கும் தெரியாது. 10 அடி துாரத்தில் விபத்து நடந்து விடும்.சட்ட திருத்தம்:வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் மீது, எத்தனை முறை வழக்குகள் பதிந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொது மக்கள், தங்கள் கடமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
தற்போது, லோக்சபாவில், மோட்டார் வாகன சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோரிடம், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் இருந்து புறப்படும் போது, மொபைல் போனை எடுக்க மறக்காதது போல, உயிர் காக்கும் ஹெல்மெட்டை, வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
அதேபோல, பின்னால் அமர்வோரும் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு, ஹெல்மெட் அணிவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். விபத்து எங்கே, எப்போது நடக்கும் என, யாருக்கும் தெரியாது. 10 அடி துாரத்தில் விபத்து நடந்து விடும்.சட்ட திருத்தம்:வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் மீது, எத்தனை முறை வழக்குகள் பதிந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொது மக்கள், தங்கள் கடமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
தற்போது, லோக்சபாவில், மோட்டார் வாகன சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோரிடம், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் இருந்து புறப்படும் போது, மொபைல் போனை எடுக்க மறக்காதது போல, உயிர் காக்கும் ஹெல்மெட்டை, வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..