சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ சற்றுமுன் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான ஒருசில நிமிடங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல் என போற்றப்படும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிமீ தூரத்தில் சந்திரயான் 2 இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாகவும், இந்த புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..