Image


சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ சற்றுமுன் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான ஒருசில நிமிடங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல் என போற்றப்படும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.


நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிமீ தூரத்தில் சந்திரயான் 2 இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாகவும், இந்த புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது