1) கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற நிலை மத்திய அரசு 23/08/2010 ல் அறிமுகம் செய்தது.

2) தமிழகத்தில் 15/11/2011 (அரசாணை - 181) இல் RTE சட்ட மொழிவை எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

3) ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தெளிவான கட்டமைப்பு திட்டம் பெற 2012 ஏப்ரல் மாதம் ஆகியும் தமிழக அரசு TET தேர்வு நடத்துதல் தொடர்பான பாடதிட்ட வரைவு முறைப்படுத்த முடியவில்லை.

4) கல்வி உளவியல் தவிர மற்ற பாடங்கள் தேர்வு செய்வதற்கு ஆசிரியர்கள் இடையே மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன.

5) UG, B.Ed ல் பயின்ற பாடங்கள் மிகவும் குறைந்த அளவு கேள்விகளும், பயிலாத பாடங்கள் அதிக அளவிலான கேள்விகளும் TET அமைப்பு என்ற நிலைப்பாடு தமிழக அரசு எடுத்தது.

உதாரணமாக, B.Sc விலங்கியல் படித்த ஒரு ஆசிரியர் B.ed முடித்து இருப்பின் அவர் இயற்பியல் வேதியியல் தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் மற்றும் கணிதம் தமிழ் ஆங்கிலம் கல்வி உளவியல் போன்ற பாடங்களில் கேட்கப்படும் 150 கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய சூழல்.

மற்றும் ஒரு உதாரணமாக BA தமிழ் படித்த ஆசிரியர் தமிழில் 30, ஆங்கிலத்தில் 30, உளவியலில் 30, சம்மந்தமே இல்லாத சமூக அறிவியலில் 60 என 150 மதிப்பெண்களிற்கு பதில் தர வேண்டும்.

6) தாம் பயின்ற பாடங்களில் வினாக்கள் கேட்காமல் மற்ற பாடங்களில் வினாக்கள் கேட்கும் பட்சத்தில் தேர்ச்சி சதவீதம் கட்டாயம் வெகுவாக குறைகிறது கண்கூடு.

7) இது வரை நடந்த TNTET களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் முழுவதும் வழங்கும் பணியிடங்கள் இல்லாமையாலும், தற்போது தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பணி கிடைக்கும் என்று எண்ணி பயின்று வந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்தது. கல்வி அமைச்சர் அவரது பேட்டியில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணியிடம் இல்லை என்றதால் தேர்வர்கள் மத்தியில் மனதளவில் விரக்தி தன்மை உருவானது.

8) TET பாடதிட்டத்தினை TRB இணைய தளத்தில் தமிழக அரசு வெளிவிட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் 1-5 பாட புத்தகங்களும், பட்டதாரி ஆசிரியர்கள் 6-8 பாட புத்தகங்களையும் பயின்றால் போதும் என்று இருந்தது.

9) இதை உறுதி படுத்திக்கொள்ள CM CELL க்கு வினவினார் ஓர் ஆசிரியர். அதற்கு பதிலும் வந்தது. TRB இணைய தளத்தில் வெளிவந்த பாடதிட்டத்திலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும் என்ற அந்த பதிலாக ஆசிரியர்கள் நிம்மதியாக பயின்றனர்.

10) 2019 June மாதம் TET PAPER 1, PAPER 2 தேர்வும் வந்தது. பல்வேறு சிரமங்கள் மத்தியில் தேர்வுத் தயாரான ஆசிரியர்களுக்கு மிகவும் வேதனை தரும் விதமாக கடினமான தேர்வாக இருந்தது.
காரணம் TRB இணைய தளத்தில் தமிழக அரசு வெளிவிட்ட பாடத்திட்டங்கள் தாண்டி +1,+2 & கல்லூரி அளவிலான வினாக்கள் இடம்பெற்று இருந்தன.

11) இவற்றையெல்லாம் தாண்டி தற்போது தமிழக அரசின் 10,11,12 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டத்திலிருந்து வினாக்கள் பல இடம்பெற்று இருந்தன.
ஜூன் 3 ஆம் தேதிதான் மாணவர்களுக்கே புதிய புத்தகம் கிடைத்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில் (june 8) வரும் TET க்குள் ஆசிரியர்களுக்கு அத்தனை புத்தகங்களை பார்க்க கூட முடிந்து இருக்காது.

12) GST உள்ளிட்ட சுமார் 50% கேள்விகள் புதிய பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்பட்டது பற்றி மீண்டும் CM CELL ல் ஒரு ஆசிரியர் வினவினார். அதற்கு பதிலாக வந்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. TRB இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட பாட திட்டங்கள் தவிர வேறு எங்கிருந்தும் TET ல் வினாக்கள் கேட்கப்படவில்லை என்பது தான் அந்த பதில்.

சமுக அறிவியல் UG, PG பயின்ற ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற வாய்ப்பு : காரணம் அவர்களின் பாட மதிப்பெண் அதிகம்.

13) இந்த நிலையில் RTE act ( அடிப்படையில் TET )பற்றிய நிபந்தனைகள் பற்றிய புரிதல் இல்லாத கல்வி அதிகாரிகள் மூலம் சம்மந்தமே இல்லாமல் சிக்கித் தவிக்கும் 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் TET பயிற்சி தந்தது DIET.

14) DIET தந்த TET பயிற்சியில் எந்தவொரு பாடத்திட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் அவசரநிலையில் பயிற்சி தந்த விதம்.

&

15) இவற்றை எல்லாம் தாண்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு போட்டித்தேர்வு போன்ற நிலையில் தற்போது உருவாக்கம் பெற்றுள்ளது.

ஆசிரியர்களின் போதிக்கும் திறன், மேம்பாட்டு வழிமுறைகள், கல்வி உளவியல், பொது அறிவு, உலக நடப்பு, நெறிமுறைகள் போன்ற அறம் சார்ந்த தேர்வாக அமைத்தலைத் தவிர்த்து, மருத்துவம் பயின்றவரிடம் பொறியியல் துறை சார்ந்த வினாக்கள் வினவல் போன்ற அமைப்பே நடந்து முடிந்த TNTET.

23/8/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்ற சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவை என்பது முரண்பாடு.

- உள்ளிட்ட பல காரணங்களால் கடந்து TET ல் தேர்ச்சி சதவீதம் இவ்வளவு சரிவு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- பல்வேறுபட்ட சிக்கல்கள் TET ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது.
அதனாலேயே நீதிமன்றங்கள் மூலமாக TET சம்மந்தமான வழக்குகளும் அதிகமாக போடப்படுகின்றன.

தமிழக அரசு கரங்களில் இனி ஆசிரியர் பணிக் கனவுகள்.

நன்றிகளுடன்,

ஆ.சந்துரு.
பட்டதாரி ஆசிரியர்.