பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியர் மற்றும் ஆசிரியைகள் தங்களின் புகைப்படங்களை பதிவு செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவியர் மற்றும் ஆசிரியைகள் தங்களின் புகைப்படங்களை பதிவு செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளி நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் மாணவியர், ஆசிரியை சார்ந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தடை ஏதும் இல்லை என்றும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை தடை விதித்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தகவல் அளித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..