சென்னை: தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜன.2ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜன.4 திறந்திட வேண்டும். 2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலனை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.