🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 124

அதிகாரம் : அடக்கமுடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

 மலையினும் மாணப் பெரிது.

பொருள்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது. ஆனால் மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது.

 - சாமுவேல் ஸ்மைல்ஸ்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

  கட்டிக்கொடுத்தசோறும்கற்றுக்கொடுத்தசொல்லும்எத்தனைநாள்நிற்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sounds of Things - பொருள்களின் ஒலிகள்

1. Nuts - crack
2. Plates - rattle
3. Water - laps
4. Winds - sigh

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. இந்தியாவிற்கு வருகை தந்த முதல் சீனப் பயணி யார் ?

 பாஹியான் 

2. ஏழைகளின் காசி என்று அழைக்கப்படும் ஊர் எது ?

 இராமேஸ்வரம்

✡✡✡✡✡✡✡✡
Daily English

Tri - syllabic words

1. several - sev-er-ral
2. popular - pop-u-lar
3. permission - per-mis-sion
4. ultimate - ul-ti-mate

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

முயல்




🐇 முயல் உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். முயல்கள் ஐரோப்பிய தென்மேற்கு ஆசியா சுமத்ர ஆப்ரிக்கா தென்அமெரிக்க மற்றும் ஜப்பானின் சில தீவுகளை பிறப்பிடமாக கொண்டுள்ளன. 


🐇 இவை சமவெளி காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் பாலை நிலங்களில் வாழும் விலங்கினமாகும்

🐇ஒரு வயதுக்கும் குறைவான முயல் ஆங்கிலத்தில் லெவெரெட் (leveret) என்று அழைக்கப்படுகிறது. பல முயல்கள் சேர்ந்த ஒரு கூட்டம் ஆங்கிலத்தில் "ட்ரோவ்" (drove) என்று அழைக்கப்படுகிறது.

🐇முயல்கள் இணைந்த அல்லது இயங்கக் கூடிய மண்டையோடுகளைக் கொண்டுள்ளன. இது பாலூட்டிகளிலேயே ஒரு தனித்துவமானது ஆகும். முயல்கள் 48 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன, அதேநேரத்தில் குழிமுயல்கள் 44 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :


பேராசை பெரு நஷ்டம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா வைரஸ் எதிரொலியால் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

🔮ஆள்காட்டி விரலால் 1.25 கிலோ எடை கொண்ட ஜாரை தூக்கி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் ‘முடியாதது என்று எதுவும் இல்லை’ என நிரூபித்து உள்ளார்.

🔮ஈரானில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

🔮தஞ்சை ஆதீஸ்வரர் கோவிலில் கொள்ளைபோன 22 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

🔮20 ஓவர் உலக ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றது.

🔮60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை: தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம்...சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

🔮திருப்பதி கோயிலில் வரும் 10, 17ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்: சிறப்பு தரிசனத்தில் அனுமதி.


🔮திருப்பூரில் பறக்கும் பாலம்! ரூ.700 கோடியில் அமைக்க முடிவு:மண் பரிசோதனை பணி துவங்கியது.

HEADLINES
🔮Coronavirus | Five more people from Kerala test positive for COVID-19.

🔮Coronavirus | Iran reports 49 new deaths, highest single-day toll.

🔮Boxing: Pooja Rani, Vikas Krishan book Olympic berth, enter semis of Asian qualifiers.

🔮CHENNAI: Govt. adds a third site to options for developing city’s second airport.

🔮Nari Shakti awardees must contribute to eradicate malnutrition and save water: PM Modi.

🔮Being first or woman doesn't matter, being a fighter pilot does, say IAF's first female fighter pilots.             
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴