*அனைத்து கல்வி நிறுவனங்கள் மார்ச்-31 வரை மூட உத்தரவு 
*12,11,10 வகுப்பு தேர்வுகள்  மற்றும் நுழைவு தேர்வு திட்டமிடபட்ட படி நடைபெறும் 
*அங்கன்வாடி மையங்கள் மார்ச்-31 வரை மூட உத்தரவு

சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கோரிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் . அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Join Telegram& Whats App Group Link -Click Here