நவம்பர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தொடர்பான  கருத்து கேட்பு கூட்டம்

DSE  Proceeding For School Reopen Date 04.11.2020 


தமிழகத்தில் நவம்பர் 16 அன்று 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க படும் என முதலைச்சர் செய்திகுறிப்பு வெளியிட்டர் . பள்ளி திறப்பு தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் ,கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை மாண்புமிகு முதலமைச்சர் ,கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதன் அடிப்படையில் தற்போது செய்தி வெளியீடு எண்: 830 நாள்:04.11.2020 பள்ளிக் கல்வித்துறை அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது அது பின்வருமாறு 

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கோவிட் 19 நோய்த் தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் சூழ்நிலையில், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை விரைவில் திறந்திட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய அரசு, 30.9.2020 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15.10.2020க்கு பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது. எனினும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்துஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறந்திடலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது.

 மேலும், வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக்கொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. 

மத்திய அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் இது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு இருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது . 

இந்த கருத்து கேட்பு கூட்டங்களில், 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும். என அதில் தெரிவிக்கபட்டுள்ளது 



Join Telegram& Whats App Group Link -Click Here