PG –TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்க வாய்ப்பு .


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி வரும் கல்வியாண்டில் (2021- 2022) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப பள்ளிக்கல்வித் துறைமுடிவு செய்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்  உத்தேச காலியிடங்கள் பட்டியல் இணை இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மைகல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான நேரடி காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். 

அடுத்த கட்டமாக, 2019-2020, 2020-2021 ஆகிய கல்வி ஆண்டுகளுக்குரிய காலிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் (2020-2021) அரசு பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலிபணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணி நியமனம் நடைபெறக் கூடும்.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்பதவிகளில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் போட்டித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில் அதாவது 2021- 2022-ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுவருகிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் திரு எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “2021- 2022-ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்ப, காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச பட்டியல் Email வழியாக அனுப்பிவிட்டு அதன் பிரதியை 18-ம் தேதி (இன்று) நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அறிவித்துயுள்ளார்

ஏற்கெனவே, ஏறத்தாழ 3,500 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான காலியிடங்களின் விவரமும் கேட்கப்பட்டிருப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Telegram& Whats App Group