01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது.


01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020

மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது

பின்னர் கொரோனா காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் முடக்கியது. கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. ஊழியர்களுக்கு பழைய விகிதத்தில் அகவிலைப்படியை வழங்கி வந்த நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.