பள்ளிகள் & அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்!!


அரசு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளிகள்‌ அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லா பணியாளர்கள்‌ கடன்‌ தொகை பெற்றது - திரும்ப செலுத்தாது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 


அதன் படி அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌, அலுவலகங்களிலும்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லா பணியாளர்கள்‌ கூட்டுறவு சங்கம்‌ மூலம்‌. ஊதியச்‌ சாண்று பிணை தலைமையாசிரியரின்‌ அனுமதி பேரில்‌ கடன்‌ பெற்று கடணை சரிவர திரும்ப செலுத்தவில்லை எனவும்‌, அதனை பிடித்தம்‌ செய்து கொடுக்க வேண்டி சம்மந்தப்பட்ட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு பல கடிதங்கள்‌ அணுப்பிவைக்கப்பட்டு வருகிறது எனவும்‌, இந்நிலையில்‌ இதுநாள்‌ வரையிலும்‌ சார்ந்த பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ தங்களது தபால்‌ கண்டும்‌ கடன்‌ பிடித்தம்‌ செய்து தருவதாக தெரியவில்லை: எனவும்‌, இதுவரை பல ஆசிரியர்கள்‌ / பணியாளர்கள்‌ கூட்டுறவு சிக்கன சங்கங்கள்‌ புகார்‌. மனுக்கள்‌ அளித்துள்ளனர்‌. அதனால் முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ நியமன அலுவலர்‌ என்பதால்‌ சார்ந்த பணியாளர்‌ மீது விதிகள்‌ மீறப்பட்டு இருப்பின்‌ உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு விதிகளின்படி ஆணைகள்‌ வழங்கும்‌ படியும்‌, அவர்கள்‌ திரும்ப செலுத்த வேண்டிய பணத்தை உரிய முறையில்‌ திரும்ப செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு என தெரிவித்துள்ளார்