GO NO 1 Date 05.05.2021 - 06.05.2021 முதல்‌ 20.05.2021  வரை மாற்றுத்‌ திறனாளிகள்  அலுவலகத்திற்கு வருவதற்கு விலக்கு 


கொரோனா பெருந்தொற்று மிகவேகமாகப்‌ பரவி வரும்‌ இக்காலகட்டத்தில்‌, அரசாணை (நிலை) எண்‌.364, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை (பே.மே.4)த்‌ துறை, நாள்‌ 03.05.2021.  சட்டத்தின்‌ படி 06.05.2021 முதல்‌ 20.05.2021 வரையுள்ள காலத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன்‌ தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு அமல்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாறான கட்டுப்பாடுகளுள்‌ அனைத்து அரசு மற்றும்‌ தனியார்‌ அலுவலகங்கள்‌ அதிகபட்சம்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க வேண்டும்‌ என்பதும்‌ ஒன்றாகும்‌.

கொரோனா பெருந்தொற்று காலத்தில்‌ மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்களின்‌ பாதுகாப்பினைக்‌ கருத்தில்கொண்டு 06.05.2021 முதல்‌ 20.05.2021 வரையிலான காலகட்டத்தில்‌ மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்கள்‌ அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து தமிகஅரசு ஆணைவெளியிட்டுள்ளது.