தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு 29.05.2021 அன்று வெளியிட்டுள்ளது


அதன் படி 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள்,மே-2021 தள்ளி வைக்கப்படுகிறது, மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14துறைக் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும். 

விண்ணப்பதாரர்களின் நலன் கருது, துறைத் தேர்வுகள், மே-2021-க்கு  விண்ணப்பத்திற்கான கடைசி நாள்  31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது, இத்தேர்வானது ஆகஸ்டு- 2021ல் நடத்தப்படும். மேற்படி  தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துல் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-॥, தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு, தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேது பின்னர் அறிவிக்கப்படும்.


அறிவிக்கை எண் 18/2019, நாள் 29.05.2019-இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008-2019, 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப் பணித் துறை) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு  நேர்முகத் தேர்வின் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது