தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு 29.05.2021 அன்று வெளியிட்டுள்ளது
அதன் படி 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள்,மே-2021 தள்ளி வைக்கப்படுகிறது, மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14துறைக் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்களின் நலன் கருது, துறைத் தேர்வுகள், மே-2021-க்கு விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது, இத்தேர்வானது ஆகஸ்டு- 2021ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துல் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-॥, தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு, தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேது பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கை எண் 18/2019, நாள் 29.05.2019-இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008-2019, 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப் பணித் துறை) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு நேர்முகத் தேர்வின் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..