தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.(ஜுன் -21 வரை)


இந்த முழு ஊரடங்கு 14- 6- 2021 முதல்‌ 21 6- 2021 காலை ௦6-00 மணி வரை, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு

(கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌,  கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை  )மேற்காணும்‌ 11 மாவட்டங்களில்‌ கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 14- 6- 2021 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

👉தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌ (Housekeeping) இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌.

DIPR-PR NO.263-Hon'ble CM Press Release-Lockdown-Date 11.6.2021

👉மின்‌ பணியாளர்‌ (Electricians), (Plumbers),கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ )Technicians) மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌  அனுமதிக்கப்படும்‌.

👉மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ- பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

 👉வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்லு காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத்‌ தவிர, இதர 27மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன்‌கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படும்‌.

👉பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌அனுமதிக்கப்படும்‌.

👉டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

👉வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌) பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்லு காலை 9.00 மணி முதல மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

 👉கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉 மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுந்க்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனைசெய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉மிக்ஸி, கிரைண்டர்‌, டி.வி. பிரிட்ஜ்‌ உள்ளிட்ட வீட்டுஉபயோகப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌,ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்துவழங்கும்‌ நிறுவனங்கள்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றிதொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉தற்போது இதர தொழிற்சாலைகளும்‌ 33 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌ நான்கு சக்கர வாகனங்களில்‌ பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்‌. தற்போது அவர்கள்‌ தங்களதுஇரு சக்கர வாகனங்களிலும்‌ இ- பதிவு மற்றும்‌ தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அடடையுடன்‌ பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்‌.

👉தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ 20 சதவிகிதம்‌ பணியாளர்கள்‌ அல்லது 10 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அனுமதிக்கப்படுவர்‌.