தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு  28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது .


Press Release (Lockdown)-DATE :20/06/2021

மாவட்டங்கள்‌ மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌,தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 1-ல்‌  உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

வகை 2 - (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 2-ல்‌ உள்ள 23 மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது

வகை 3 - (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌

வகை 3-ல்‌ உள்ள 4 மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக  செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது

23 மாவட்டங்களில்‌ அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் விபரம்  

  • மளிகை கடைகள் பலசரக்கு கடைகள் காய்கறி கடைகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி
  •  உணவகங்கள் மற்றும் அடுமனை களில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி
  •  இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
  •  அரசின் அனைத்து அத்தியாவசியத் துறையில் 100 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும் இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
  •   சார் பதிவு அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி
  •  மின் பொருள்கள் பல்ப் கேபிள் ஸ்விச் உயர் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள் ஹார்ட்வேர் கடைகள் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி
  •  கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் செய்யும் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  •  செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி
  •  பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு மட்டும் அனுமதி
  •  வாடகை வாகனங்கள் டாக்ஸி ஆட்டோ பயணிகள் இப-பதிவு செல்ல அனுமதிக்கப்படுவர்


 மாவட்டங்களில்‌ அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் விபரம்  

  • மளிகை கடைகள் பலசரக்கு கடைகள் காய்கறி கடைகள் இறைச்சி கடைகள் மீன் விற்பனை செய்யும் கடைகள் காய்கறி பலம் மற்றும் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவர்
  • உணவகங்கள் மற்றும் அடுமனை களில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் 9 மணி வரை அனுமதிக்கப்படும்
  • இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகள் 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும்
  • குழந்தைகள் சிற்றாறுகள் மாற்றுத்திறனாளி முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்ற பெண்கள் விதவைகள் ஆகியோருக்கு இல்லங்கள் இவை தொடர்பான போக்குவரத்துக்கு இப்பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படுவர்
  • அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அனுமதி உண்டு
  • அனைத்து அரசு அலுவலகங்களும் நூறு சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதி
  • சார் பதிவு அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி
  •  மென்பொருள்கள் பல்பு கேபிள் சுவிட்ச் வயர் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள் ஹார்ட்வேர் கடைகள் வாகன உதிரிப்பாக விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
  • கல்வி புத்தகம் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி
  • பாத்திரக் கடைகள் பேன்ஸி அழகுசாதனப் பொருட்கள் போட்டோ மற்றும் வீடியோ கடைகள் சலவை கடைகள் தையல் கடைகள் அச்சகங்கள் ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
  • மிக்ஸி கிரைண்டர் தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி
  • அழகு சாதனங்கள் சலூன்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர் மட்டும் அனுமதிக்க வேண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி
  • பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்
  • சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து நிலையான வழிகாட்டலைப் பின்பற்றி 50% இருக்கையில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்
  • வாடகை வாகனங்கள் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய இப்பதிவு இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் மேலும் வாடகை டாக்சி ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பெண்கள் 2 பயணிகள் பயணிக்க அனுமதி


பொதுவான விபரம் 


வகை 2 மற்றும் வகை 3 மாவட்டங்களிடையே இ -பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும் 

மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளோடு பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி.