தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன


வகை 1 - (11 மாவட்டங்கள்‌ )

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌,நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 2 - (23 மாவட்டங்கள்‌ )

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பபெம்பலூர்‌,  புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 3 - (4 மாவட்டங்கள்‌ )

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌


வகை 1ல்‌ உள்ள மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு எற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள்‌ சில கடைகள்‌ / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத்‌ தளர்வு அளிப்பதுடன்‌, கூடுதலாக பின்வரும்‌ செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படுகிறது.

Lockdown Press Release 25.06.2021


காலை 6.00 மணி முதல்மாலை 7.00 மணி வரை மட்டும்அனுமதிக்கப்படும் கடைகள்

  • தேநீர்க்கடைகள்
  • மின்பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்மற்றும்ஒயர்கள்‌ ,
  • ஹார்டுவேர்கடைகள்
  • கல்விப்புத்தகங்கள்மற்றும்எழுதுபொருட்கள்விற்பனை செய்யும்கடைகள்‌ , காலணிகள்விற்பனை செய்யும்கடைகள்,
  • பாத்திரக்கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்பொருட்கள்‌,
  • போட்டோ/ வீடியோ,
  • சலவை, தையல்அச்சகங்கள்‌,
  • ஜெராக்ஸ்கடைகள்,
  • மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்பொருட்களின்விற்பனை மற்றும்பழுதுநீக்கும்கடைகள்,
  • வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும்வாகன பழுதுபார்க்கும்மையங்கள்‌,
  • வாகனங்களின்உதிரிபாகங்கள்விற்பனை செய்யும்கடைகள்‌,
  • செல்பேசி மற்றும்அதனைச்சார்ந்த பொருட்கள்விற்பனை செய்யும்கடைகள்‌, கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனுசாதனங்களின்உதிரிபாகங்கள் செய்யும்கடைகள்
  • சாலையோர உணவுக்கடைகளில்பார்சல்சேவை மட்டும் ,
  • கட்டுமானப்பொருட்கள்விற்பனை செய்யும்கடைகள்
  • அழகு நிலையங்கள்‌, சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50%  வாடிக்கையாளர் மட்டும்

 

👉அரசின்அனைத்து அத்தியாவசியத்துறைகள்‌ 100% பணியாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்படும்‌.

 👉 சார்பதிவாளர்அலுவலகங்கள்‌ 100% பணியாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்படும்‌.

 👉அனைத்து தனியார்அலுவலகங்கள்மற்றும்நிறுவனங்கள்‌, 50% பணியாளர்களுடன்செயல்படஅனுமதிக்கப்படும்‌.

 👉வங்கிகள்மற்றும்காப்பீட்டு நிறுவனங்கள்‌, தானியங்கி பணம்வழங்கும்‌ (ATM) சேவைகள்‌ 50% பணியாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்படும்‌.

 👉இந்திய பங்கு மற்றும்பரிவர்த்தனை வாரியம்‌) மற்றும்அதன்செயல்பாடுகள்‌ 50% பணியாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉 பள்ளி, கல்லூரிகள்மற்றும்பல்கலைக்கழகங்கள்மற்றும்பயிற்சி நிலையங்களில்மாணவர்சேர்க்கை தொடர்பான பணிகள்அனுமதிக்கப்படும்‌.

👉அரசு பூங்காக்கள்மற்றும்உள்ளாட்சி அமைப்புகளின்கட்டுப்பாட்டில்உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்கள்காலை 6.00 மணி முதல்காலை 9.00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும்செயல்பட அனுமதிக்கப்படும்‌.

👉இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை சசய்யும்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவைகள்‌ மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

வகை 2-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் / செயல்பாடுகளுக்கு காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படூகின்றன.


  • பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் , 
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
  • கணினி வன்பொருட்கள், மமென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள்
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் 


👉மாவட்டங்களுக்கிடையே /மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வமிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி,குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடூகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

👉அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

👉அனைத்து நகைக்கடைகள் ,அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல்மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

👉கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள்  உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

 👉காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த (வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.