Sweeper ,Night watchman pay continuation order for 3 Year


பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட துப்புரவாளர்கள் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை 01.01.2021 முதல் 31 12 2023 வரை வெளியிடப்பட்டுள்ளது

Sweeper ,Night watchman pay continuation order for 3 Year  Go No 120 Date :03.08.2021   (Go No 47,Go No 252,Go No 50,Go No75)

இனி வரும் காலங்களில் அரசு ஆணை எண் 47 பள்ளிக்கல்வி துறை நாள் 02.03.2021 மற்றும் அதற்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட மாட்டாது.

மேற்கூறிய 2213 துப்புரவுப் பணியில் பணியாற்றும் பணியாளர்களின் ஒய்வுக்கு  பிறகு அப்பணியிடங்கள் நிரப்பப்படமாட்டாது.

இனிவரும் காலங்களில் துப்புரவாளர் பணியிடம் வெளிமுகமை மூலம் மட்டுமே நிரப்பப்படும்.

தற்போது பணிபுரிந்து வரும் 774 துப்புரவாளர் மற்றும் 470 இரவு காவலர் ஆக மொத்தம் 1244 பணியாளர்கள் பணியிடங்களுக்கு மட்டும் இந்த தொடர் நீட்டிப்பு ஆணை ஆனது வழங்கப்பட்டுள்ளது  என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.