10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

செய்தி வெளியீடு எண்‌ : 112 நாள்‌: 16.01.2022 செய்தி வெளியீடு

கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல்‌ 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10முதல்‌ 12 வரையிலான வகுப்புகள்‌ மட்டும்‌ செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌, அதிகரித்து வரும்‌ கொரோனா பெருந்தொற்று பரவல்‌ காரணமாக மாணவர்களின்‌ நலன்‌ கருதி வரும்‌ 31ஆம்‌ தேதி வரை 10, 11 மற்றும்‌ 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும்‌ விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும்‌ 19 அன்று தொடங்கி 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும்‌ ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்புபின்னர்‌ வெளியிடப்படும்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9