விடுமுறை - பொங்கல்‌ மற்றும்‌ தைப்பூசத்‌ திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.


தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ ஜனவரித்‌ திங்கள்‌ 7ஆம்‌ நாள்‌ முதல்‌, இரவு நேர ஊரடங்கும்‌, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ முழு ஊரடங்கும்‌ நடைமுறையில்‌ உள்ள நிலையில்‌, 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள்‌ தங்களது சொந்த ஊருக்குச்‌ சென்று பண்டிகையை மகிழ்வுடன்‌ கொண்டாட ஏதுவாகவும்‌, 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌ நிலையிலும்‌, 18.01.2022, தைப்பூசத்‌ திருநாள்‌ அன்று அரசு விடுமுறையானதாலும்‌, இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள்‌ சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள்‌ வரப்பெற்றன.

2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன்‌ பரிசீலித்து, பொங்கல்‌ மற்றும்‌ தைப்பூசத்‌ திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌ நிலையிலும்‌, 18.01.2022 தைப்பூசத்‌ திருநாள்‌ அன்று அரசு விடுமுறையானதாலும்‌, இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை அளித்தும்‌ அவ்விடுமுறையை ஈடுசெய்யும்‌ வகையில்‌, அதற்கான பணி நாளாக 29.01.2022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும்‌ ஆணை வெளியிடப்படுகிறது.