school Reopen Proceeding  Date :28.01.2022

அரசின்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும்‌ 01.02.2022 முதல்‌ நேரடி வகுப்புகள்‌- வழிகாட்டு நெறிமுறைகள்‌- தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறை- நாள்‌.28.01.2022


கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை நேரடி வகுப்புகள்‌ 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில்‌ அரசு செய்தி வெளியீட்டின்படி, மாணவர்களின்‌ கல்வி நலனை கருத்தில்‌ கொண்டு  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ (SOP) பின்பற்றி 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை 01.02.2022 முதல்‌ அனைத்து வகை பள்ளிகளிலும்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ (100%) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்