Learning Outcomes Training Postponed 

தொடக்க, நடுநிலை மற்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கான திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்குதல்‌- கற்றல்‌ விளைவுகள்‌ பயிற்சி தற்காலிகமாக ஒத்திவைப்பு

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஒன்று முதல்‌ ஒன்பதாம்‌ வகுப்பு வரைக்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ அனைவருக்கும்‌ கற்றல்‌ அடைவுகள்‌ சார்ந்த வலுவூட்டல்‌ பயிற்சி 10.01.2022 முதல்‌ வட்டாரத்‌ தலைமையிடத்தில்‌ தெரிவு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளியில்‌ அமைந்துள்ள உயர்‌ தொழில்‌ நுட்ப ஆய்வகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்‌, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஒன்று முதல்‌ ஒன்பதாம்‌ வகுப்பு வரைக்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ அனைவருக்கும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது. எனவே, 03.02.2022 முதல்‌ நடைபெற உள்ள கற்றல்‌ அடைவுகள்‌ சார்ந்த வலுவூட்டல்‌ பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பள்ளிக்‌ கல்வி ஆணையர்  அவர்கள் சுற்றறிக்கை