HSC ,SSLC Supplementary Exam Time -2022
துணைத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறைகள்
மே 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 )ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூலை / ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் மே 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு தோல்வியுற்ற பாடங்களுடன் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
கடந்தாண்டுகளில் நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (11) தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (12) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாமாண்டு (11) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு கட்டணம்:-
4. தேர்வுக் கட்டணம் ரூ125
2. ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50
மொத்தக் கட்டணம் ரூ.175
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..