GO No 44 Date 29 07 22 மாற்றுமுறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் மாநில அரசு பெண் பணியாளர்கள்  ஆசிரியர்களுக்கு  270 நாட்கள் பராமரிப்பு விடுப்பு வழங்குதல் ஆணை


குழந்தைகள் நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை குழந்தைகள் நலம் மாற்றுமுறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் மாநில அரசு பெண் பணியாளர்கள்  ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்காக 270 நாட்கள் பராமரிப்பு விடுப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


G.O (Ms) No.44, dated 29.07.2022 in Pdf 


நிபந்தனைகள்‌:-

1. இவ்விடுப்பு அரசு மற்றும்‌ அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ பெண்‌ பணியாளர்களுக்கும்‌ பொருந்தும்‌.

2. மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல்‌ வேண்டும்‌.


3. குழந்தை பிரசவித்த மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவசான்றிதழ்‌ அடிப்படையில்‌ விடுப்பு வழங்கப்பட வேண்டும்‌.


4. மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு, அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம்‌.


5. இவ்விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்‌ வழங்கப்படும்‌.