தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) தொடங்க உள்ளது.
பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்தப் பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், பி.பி.டி. (இயன்முறை மருத்துவம்) ஆகிய மூன்று படிப்புகளிலும் தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்தப் பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், பி.பி.டி. (இயன்முறை மருத்துவம்) ஆகிய மூன்று படிப்புகளிலும் தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..