*🔵🔵நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது*
*🔵🔵இந்நிலையில் சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், நடுநிலையோடு தேர்தல் பணி செய்வோம் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்*
*🔵🔵மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்கள் முழுமையாக தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வருகின்றனர்*
*🔵🔵இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது*
*🔵🔵தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவர்கள் வசிக்கும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பணியமர்த்த வேண்டும். அப்போது அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் இவிஎம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்*
*🔵🔵அப்படி அல்லாமல் வேறு தொகுதியில் பணியமர்த்தினால் அனைத்து அலுவலர்களும் தபால் வாக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குளில் செல்லாத வாக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. அலுவலர்கள் இரண்டு சின்னத்தில் வாக்களிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை*
*🔵🔵இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..