திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: கணிப்பொறி அறிவியில் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: நகல் ஆராய்வாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: படிப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை கட்டளை பணியாளர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஒளி நகல் எடுப்பவர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 09
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் 15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 07
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: கூட்டுபவர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான http://www.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் - 610 004
மேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..