RTI –GO. 37 Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்
அரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக திரு V சிங்காரம் என்பார் தகவல் பெறும் சட்டம் 2005 யில் பொது தகவல் அளிக்கும் அலுவலர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகம், நந்தனம், சென்னை - 35. அவர்களிடம் சில வினாக்களுக்கு பதில் தருமாறு வேண்டிருந்தார் அதற்கான RTI பதில்கள் அணுப்பபட்டுள்ளது . அவர் கோரிய கேள்விகள் மற்றும் RTI பதில் கீழே தரப்பட்டுள்ளது
.
கேள்வி -1.
அரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு, கருவூல ஆணையர் அலுவலர் அலுவலகத்திலிருந்து ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா அதன் விபரம் தருக.
RTI –பதில் 1 :
அரசாணை எண்.37, நாள்10.03.2020 இவ்வலுவலகத்தால் மேற்குறிப்பிட்டு அனைத்து மாவட்ட கருவூலங்களுக்கும் 18.03.2020-ல் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட வில்லை என தெரிவிக்கலாகிறது.
கேள்வி -2.
அரசாணை 37, நாள் : 10.03.2020 அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா என்பதற்கான விபரம் - தேவை.
RTI –பதில் 2 :
அரசாணை எண்.37, நாள்.10.03.2020-ன் பத்தி 2ல் பொருந்தக் கூடிய துறைகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது
கேள்வி -3.
அரசாணை 37, நாள் : 10.03.2020 ஆசிரியர்களுக்குப் பொருந்துமா என்ற விபரம் தருக.
கேள்வி -4.
மேற்படி அசாணை ஆசிரியர்களுகுகுப் பொருந்துமெனில் அவ்வரசாணையின் எந்த சரத்து அல்லது எந்த பத்தியில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.
RTI –பதில் 3,4:
அரசாணை எண்.37, நாள்.10.03.2020, அனைத்து துறையினருக்கும் பொருந்தும் என ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு பொருந்துமா என தெளிவுரை கோரி அரசுக்கு கடிதம் இவ்வலுவலகத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது. அரசிடமிருந்து பதில் இதுவரை பெறப்படவில்லை.
கேள்வி -5.
ஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.
கேள்வி -6.
ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் நிறுத்தம் தொடர்பாக இவ்வலுவலகம் மூலம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருப்பின், எந்த அரசாணையின்படி அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.
RTI –பதில் 5,6:
ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும்பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கலாகிறது.
கேள்வி -7.
அரசாணை 37, நாள் : 10.03.2020ன் பார்வையில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதனையும் காட்டப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.
கேள்வி -8.
ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதையும் ரத்து செய்து, அரசு ஏதும் உத்தரவு பிறப்பித்து கருவூல ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக,
RTI –பதில் 7,8:
இது குறித்த விவரம் இவ்வலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கலாகிறது. :
கேள்வி - 9.
தற்போது ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வேண்டி பட்டியல் சமர்ப்பிக்கப்படும் போது அனுமதிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா நிராகரிக்கப்படுமெனில் அதற்கான காரணத்தை விளக்கமுடன் தருக.
RTI –பதில் 9:
தனியார் கோரும் தகவல் யூகத்தின் அடிப்படையில் உள்ளதால் பதில் அளிக்க 2(9)ன் படி வழிவகையில்லை என தெரிவிக்கலாகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..