2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவு!!!


தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரியவும், அவ்வாசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித்தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

 

 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS_Portal-ல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை - மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை பணிகள் தொடங்குதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்_