வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில்,  கரையைக் கடந்து. சென்னையில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும் சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு வண்ண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை (12 .11 .2001 வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும்) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வேலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • விழுப்புரம் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • கடலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை
  • ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சேலம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • கள்ளககுறிச்சி மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு (நாளை மறுநாள்) 12, 13 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.