தமிழகத்தில் 06-01-2022 முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு!

●மழலையர்‌ காப்பகங்கள்‌ ( தவிர, மழலையர்‌ விளையாட்டுப்‌ பள்ளிகள்‌ , நர்சரிப்‌ பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை.

DIPR-P.R No.-026-Hon'ble CM Press Release - Corona Lockdown meeting - Date 5.01.2022.pdf

 

●அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌, 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை நேரடி வகுப்புகள்‌ நடத்தத்‌ தடை விதிக்கப்படுகிறது.


●வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு!_

●ஞாயிறு முழு நேர ஊரடங்கு!

●பொதுத்‌ தேர்வுக்குச்‌ செல்லும்‌ மாணவர்‌ கல்வி மற்றும்‌ எதிர்கால நலன்‌ மற்றும்‌ தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்‌ நடைபெபறும்‌.

● அரசு, தனியார்‌ மருத்துவ மற்றும்‌ துணை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ தவிர அனைத்துக்‌ கல்லூரிகள்‌, தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ தேர்வு எழுதும்‌ பொருட்டு ஜனவரி 20ஆம்‌ தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

●பொருட்காட்சிகள்‌ மற்றும்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

●பொது பேருந்துகள்‌ மற்றும்‌ புறநகர்‌ இரயில்களில்‌ உள்ள இருக்கைகளில்‌, 50% மட்டும்‌ பயணிகள்‌

●மெட்ரோ இரயிலில்‌ 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

●அனைத்து அரசு மற்றும்‌ தனியாரால்‌ நடத்தப்படும்‌ பொங்கல்‌ மற்றும்‌ கலை விழாக்கள்‌ ஒத்திவைக்கப்படூ கிறது.

●அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள்‌(Entertainment Parks / Amusement Parks) GaeweouL& தடை விதிக்கப்படுகிறது.

●அனைத்து கடற்கரைகளிலும்‌ பொதுமக்கள்‌ நடைப்‌ பயிற்சி மேற்கொள்ள மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

●அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ வெள்ளி, சனி மற்றும்‌ ஞாயிறு ஆகிய நாட்களில்‌ பொது மக்களுக்குஅனுமதி இல்லை.

●சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்‌.

● மீன்‌ மற்றும்‌ காய்கறிச்‌ சந்தைகளில்‌ குறிப்பாக வார இறுதி நாட்களில்‌ பொதுமக்கள்‌ கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்‌ மீன்‌ மற்றும்‌ காய்கறி சந்தைகள்‌ அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

●ஞாயிறு அன்று முழு ஊரடங்கு முழு ஊரடங்கு அன்று உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி

●ஞாயிறு அன்று பொதுப் போக்குவரத்தான இரயில் மற்றும் விமான நிலையங்கள் செல்ல பயணச்சீட்டு கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்!