தமிழ்நாட்டில்‌ பள்ளி கல்லூரிகள்‌ 1- 2- 2022 முதல்‌ திறப்பு, கொரோனா நோய்ப்‌ பரவல்‌ தடுப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்‌ - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தரவு


தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகள்‌ குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு

முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 27-1-2022 அன்று ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இதில்‌, மாண்புமிகு மருத்துவம்‌- மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, தமிழ்நாடு அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆஃ.ப., மற்றும்‌ உயர்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ தற்போது குறைந்துள்ளதாகவும்‌, போதுமான மருத்துவ கட்டமைப்புகள்‌ தயார்‌ நிலையில்‌ இருப்பினும்‌ மருத்துவமனைகளில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின்‌ எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத்‌ துறையால்‌ தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின்‌ வேலைவாய்ப்பு, பொருளாதாரம்‌, மாணவ _ மாணவியர்களின்‌ எதிர்காலம்‌ மற்றும்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, பின்வரும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்கப்படுகின்றன.

தற்போது நோய்த்‌ தொற்று பரவல்‌ குறைந்திருப்பினும்‌ பொது மக்கள்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு நோய்த்‌ தொற்று பரவலை கட்டுக்குள்‌ வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள்‌ மட்டும்‌ வரும்‌ 1- 2- 2022 முதல்‌ 15- 2- 2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்‌.

DIPR-P.R.No.187-Hon'ble CM-Press Release-Covid Lockdown-Date 27.01.2022


கல்வி நிறுவனங்கள்‌

●மழலையர்‌ விளையாட்டு பள்ளிகள்‌ , நர்சரி பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை.

●நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி 1- 2- 2022 முதல்‌ அனைத்து பள்ளிகளிலும்‌ பயிலும்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்‌ நடத்தப்படும்‌.

● தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும்‌ கல்லூரிகள்‌ தவிர்த்து ஏனைய அரசு மற்றும்‌ தனியார்‌ பல்கலைக்கழகங்கள்‌ / கல்லூரிகள்‌ /தொழிற்பயிற்சி மற்றும்‌ பயிற்சி நிலையங்கள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி 1-2-2022 முதல்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

ஊரடங்கு நீக்கம்‌:

● 28-1-2022 முதல்‌ இரவு 10 மணி முதல்‌ காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக்‌ கொள்ளப்படுகிறது. வரும்‌ ஞாயிற்றுக்கிழமை (30- 1- 2022) முழு ஊரடங்கு கிடையாது.