DA hiked to 34% GO Issued separately soon - Tamil Nadu Government Press Release

அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!


செய்தி வெளியீடு எண்‌ : 1421 நாள்‌ : 16.08.2022

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ 75-வது சுதந்திர தின உரையில்‌, ஒன்றிய அரசுப்‌ பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப்‌ பணியாளர்களுக்கும்‌ அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும்‌ கோரிக்கையை ஏற்று,  மாநில அரசு ஊழியர்கள்‌/ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல்‌ அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்‌ என அறிவித்திருந்தார்‌. இந்த அறிவிப்பின்படி தலைமைச்‌ செயலளாளர்‌முதல்‌ கடைநிலை ஊழியர்‌ வரை அனைத்து தமிழ்நாடு அரசின்‌ ஊழியர்களுக்கும்‌ இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்‌.

இதற்கான அரசாணைகள்‌ விரைவில்‌ தனித்தனியே வெளியிடப்படும்‌. என தமிழக அரசு செய்தி  வெளியிட்டுள்ளது .