ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆன்லை வகுப்பு மட்டுமே – அண்ணா பல்கலைக்கழகம் 

கொரோனா பெரும் தொற்றுகாரணமாக கடந்த 24 முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடபட்டன , மாணவர்களின் கல்வி கற்றலில் தடை ஏற்படாமல் இருக்க அரசு வழி காட்டுதலின் படி அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி கற்றல் வழங்கபடுகிறது.
கொரோனா தொற்று காரணமாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளி அன்று வெளியிட்டுள்ளது 

அதன் படி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற முதல் ஆண்டு முதல் 3 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இனைய வழி வகுப்பு மட்டுமே நடைபெறும் மேலும் நாள் தோறும் 5 வகுப்புகளும் , 3 பாட வேளை புற மதிப்பீடுகள் நடைபெறும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளது 

Join Telegram& Whats App Group Link -Click Here