பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்!!!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2021- 2022 ஆண்டுக்காண திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்பிற்கு தேவையான முன் மொழிவுகள் மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது, எனவே,2021- 2022 ஆண்டுக்கான ஆசிரிர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்பிற்கு மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன் மொழிவுகளை அனுப்பிடும் வண்ணம் அறிக்கையினை தயார் செய்து உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்பிற்கு தேர்வு செய்யும் போது மலைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகள் முன்னுரிமை அடிப்படையிலும் முன் மொழிவுகளை இணைப்பில் உள்ளவாறுபூர்த்தி செய்து இச்செயல்முறைகள் கிடைத்த அன்றே மின்அஞ்சல் முகவரிகளுக்கு உரிய படிவத்தில் அனுப்பி/வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..